ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் திங்களன்று ஆய்வு செய்தார்.ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 957 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது